Homeசெய்திகள்சினிமாசூர்யா பட நடிகை திடீர் விவாகரத்து... ரசிகர்கள் அதிர்ச்சி...

சூர்யா பட நடிகை திடீர் விவாகரத்து… ரசிகர்கள் அதிர்ச்சி…

-

சூர்யாவுடன் இணைந்து ஆய்த எழுத்து திரைப்படத்தில் நடித்த நடிகை, கணவரை திடீரென விவாகரத்து செய்திருக்கிறார்.

கடந்த 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆய்த எழுத்து. மணிரத்னம் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். படத்தில் சூர்யா, சித்தார்த், ஈஷா தியோ, த்ரிஷா, மாதவன், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஈஷா தியோ. இவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி மற்றும் தர்மேந்திரா நட்சத்திர தம்பதியின் மகள் ஆவார். இவர் பாலிவுட்டில் முதலில் அறிமுகமாகி ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் உள்ளிட்ட டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்த அவர், தமிழில் அதிக படங்களில் அவர் நடிக்கவில்லை. இவர் 2012-ம் ஆண்டு பாரத் என்ற தொழில் அதிபரை காதலித்து திருணம் செய்து கொண்டார். மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும், இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் இவர் இந்தி திரைப்படங்களிலும், வெப் தொடரிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் நடிகை ஈஷா, தனது விவாகரத்தை அறிவித்துள்ளார். தனது கணவர் பாரத்தை விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ