Homeசெய்திகள்சினிமா45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா!

45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா!

-

நடிகர் சூர்யாவின் மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகா, 1990 காலகட்டத்தில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தவர். 45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா!அதன்படி வாலி, குஷி, உயிரிலே கலந்தது, டும் டும் டும், தூள் என தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவ்வாறு சூர்யா, விக்ரம், அஜித், பணம் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார். அடுத்ததாக கடந்த 2005-ல் சந்திரமுகி திரைப்படத்தில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார்.45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா! பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இவர் ஏற்ற நடித்திருந்த கதாபாத்திரம் ஜோதிகாவை வேறொரு பரிமாணத்தில் காட்டியது. அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட இவர் 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து நாச்சியார் காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் என தொடர்ந்து பல படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக மாறினார். அந்த வகையில் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். 45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா!இந்நிலையில் நடிகை ஜோதிகா 45 வயதிலும் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது அடுத்தடுத்த படங்களுக்காக மேன்மேலும் தன்னை மெருகேற்றி வருகிறார். இது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ