Homeசெய்திகள்சினிமாதொடர்ந்து அவதூறு பரப்பும் சுசித்ரா... நீதிமன்றத்தில் கார்த்திக் குமார் குற்றச்சாட்டு....

தொடர்ந்து அவதூறு பரப்பும் சுசித்ரா… நீதிமன்றத்தில் கார்த்திக் குமார் குற்றச்சாட்டு….

-

 
கோலிவுட் திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுசித்ரா. இவர் தமிழில் பல ஹிட் பாடல்களை பாடி புகழ் பெற்றவர் ஆவார். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இவர் பாடல்கள் பாடி இருக்கிறார். அதுமட்டுமன்றி டப்பிங்கும் கொடுத்துள்ளார். இதனிடையே, சில ஆண்டுகளுக்கு முன்பாக, ‛சுச்சி லீக்ஸ்’ விவகாரத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தில் இருந்து ஏராளமான சினிமா தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின
இது திரையுலகில் பெரும் சர்ச்சைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த பிரச்சனைக்கு பிறகு சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் குமார் அவரை விவாகரத்து செய்தார். அதுமட்டுமன்றி இன்று வரை சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல், ஆர்ஜேவாக அவர் பணியாற்றி வருகிறார். அண்மையில், தனியார் நிகழ்ச்சி பேட்டியில் அவர்பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில், நடிகர் தனுஷூம், ஐஸ்வர்யாவும் விவாகரத்திற்கு முன்பே, ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இல்லை, ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருந்ததாக கூறினார். மேலும், அவரது முன்னாள் கணவரான கார்த்திக் குமார் மீதும் அவர் அவதூறு பரப்பினார்
இந்நிலையில், பாடகி சுசித்ரா உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, தொடர்ந்து தன் மீது அவதூறு பரப்பி வருவதாக நடிகர் கார்த்திக் குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, நேர்காணல் மூலம் தன் பெயருக்கு களங்கம் உண்டாகும்படி பேசிய சுசித்ரா மீது கார்த்திக் குமார் வழக்கு தொடுத்திருந்தார். மேலும், அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கார்த்திக் குறித்து சுசித்ரா, அவதூறு கருத்துகளை தெரிவிக்கக்கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கு வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

MUST READ