Homeசெய்திகள்சினிமாத்ரிஷ்யம் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பகத் பாசில்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

த்ரிஷ்யம் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பகத் பாசில்….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் த்ரிஷ்யம்.த்ரிஷ்யம் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பகத் பாசில்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இந்த படத்தில் மோகன்லால் தவிர மீனா, அன்சிபா ஹாசன், கலாபவன், ஆஷா சரத் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி நடை போட்டது. அதே சமயம் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தையும் ஜீத்து ஜோசப் இயக்கி அதிலும் வெற்றி கண்டார். இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்த இவர் கடைசியாக மீண்டும் மோகன்லால் நடிப்பில் நேரு எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் , அடுத்தது என்ன படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் இது தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. த்ரிஷ்யம் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் பகத் பாசில்..... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!அதன்படி ஜீத்து ஜோசப், பகத் பாஸில் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை E4 என்டேர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. சாந்தி மாயாதேவி இந்த படத்திற்கு கதாசிரியராக பணியாற்ற இருக்கிறார். மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ