Homeசெய்திகள்சினிமாஜோஸ்வா படத்தால் கௌதம் மேனனுக்கு வந்த சோதனை!

ஜோஸ்வா படத்தால் கௌதம் மேனனுக்கு வந்த சோதனை!

-

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம் போன்ற படங்களின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதைத் தொடர்ந்து என்னை அறிந்தால், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதே சமயம் தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் கௌதம் மேனன்.ஜோஸ்வா படத்தால் கௌதம் மேனனுக்கு வந்த சோதனை!

இப்படம் ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோஸ்வா இமை போல் காக்க எனும் படத்தை களம் இறக்கினார். இந்த படத்தில் வருண் கதாநாயகனாக நடிக்க இவருடன் இணைந்து கிருஷ்ணா, யோகி பாபு, விசித்ரா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். எஸ் ஆர் கார்த்திக் இந்த படத்திற்கு ஒளி பதிவு செய்ய கார்த்திக் இசை அமைத்திருந்தார். இப்படம் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஜோஸ்வா படத்தால் கௌதம் மேனனுக்கு வந்த சோதனை!இருப்பினும் ஒரு சில இடங்களில் இந்த படத்தைக் காண பார்வையாளர்கள் வராததால் காட்சிகள் குறைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்த வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையிலும் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலைமோதி வருகின்றனர். இந்நிலையில் ஜோஸ்வா படம் ரசிகர்களின் கவனத்திற்கே செல்லவில்லை என்பது கௌதம் மேனனுக்கு பெரும் சோதனையாக வந்து முடிந்துள்ளது.

MUST READ