Homeசெய்திகள்சினிமாவிஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் 'கோட்' பட நடிகர்.... யார் தெரியுமா?

விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் ‘கோட்’ பட நடிகர்…. யார் தெரியுமா?

-

கோட் பட நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் 'கோட்' பட நடிகர்.... யார் தெரியுமா?

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த கோட் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சூர்யாவுடன் இணைந்து நடிக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகியிருக்கின்றன.

அதாவது நடிகர் சூர்யா, கங்குவா திரைப்படத்தை முடித்துவிட்டு, தற்போது சூர்யா 44 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் நிலையில் இதன் படப்பிடிப்புகள் அந்தமான், ஊட்டி, கேரளா போன்ற பகுதிகளில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைக்க ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களுடன் இணைந்து ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜயை தொடர்ந்து சூர்யாவுடன் இணையும் 'கோட்' பட நடிகர்.... யார் தெரியுமா?மேலும் இதில் பிரகாஷ்ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்தகன், கோட் ஆகிய படங்களில் நடித்திருந்த டாப் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் பிரசாந்த், சூர்யா 44 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ