Homeசெய்திகள்சினிமாகோட் படம் ஜீ நிறுவனத்திற்கு மாறிய காரணம் இதுதானா?... விஜய் படத்திற்கு போடப்பட்ட புது நிபந்தனை... கோட் படம் ஜீ நிறுவனத்திற்கு மாறிய காரணம் இதுதானா?… விஜய் படத்திற்கு போடப்பட்ட புது நிபந்தனை…
- Advertisement -
ஒட்டுமொத்த இந்திய திரைஉலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஜய். டோலிவுட், சாண்டல்வுட், மோலிவுட் என விஜய்க்கு அனைத்து திரையுலகிலும் ரசிகர்கள் ஏராளம். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.
இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் திரைப்படம் கோட். அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நாயர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் மற்றும் சென்னை என மாறி மாறி நடைபெற்று வந்தது.
இதனிடையே, கோட் படத்தின் சாட்லைட் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியதாக அண்மையில் தகவல் வெளியானது. முதலில் இப்படத்தின் சாட்லைட் உரிமையை 55 கோடி ரூபாய்க்கு வாங்க சன் டிவி நிறுவனம் முன்வந்ததாகவும், ஆனால் பல நிபந்தனைகளை விதித்ததாகவும் கூறப்படுகிறது. படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இருக்ககூடாது எனவும், 2 மணி நேர பேட்டிக்கு விஜய் நேரம் ஒதுக்கி தர வேண்டும் என்றும் கூறியதால், இத்திரைப்படத்தை படக்குழு ஜீ நிறுவனத்திற்கு கைமாற்றியதாக தெரிகிறது.