Homeசெய்திகள்சினிமாஅனிமல் அப்ரார் போல வேடம் வேண்டும்... நடிகர் பாபி தியோல் விருப்பம்...

அனிமல் அப்ரார் போல வேடம் வேண்டும்… நடிகர் பாபி தியோல் விருப்பம்…

-

- Advertisement -
அனிமல் திரைப்படத்தில் கிடைத்த அப்ரார் போன்ற வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகர் பாபி தியோல் தெரிவித்துள்ளார்.

 

தெலுங்கு திரையுலகில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் தடம் பதித்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, பாலிவுட் பக்கம் திரும்பியிருக்கிறார். அர்ஜூன் ரெட்டியை இந்தியில் ரீமேக் செய்த அவர் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் அனிமல். பிரபல பாலிவுட் நட்சத்திரம் ரன்பீர் கபூர் இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். மேலும், அனில் கபூர், பாபி தியோல், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.

 

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. இருப்பினும் இத்திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூலை தாண்டியது. இருப்பினும், அனிமல் படத்திற்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில், திரைப்பட விழாவில் பேசிய புகழ்பெற்ற கதாசிரியர் ஜாவெத், ஒரு திரைப்படத்தில் பெண்ணை அறைவது தவறில்லை என கூறி படம் வெற்றிபெற்றதால் அது மிகவும் ஆபத்தானது என தெரிவித்திருந்தார். காங்கிரஸ் பெண் எம்.பியும் அனிமல் படம் உலகிற்கு ஆபத்தானது என கடுமையாக சாடினர்

 

இருப்பினும், பாலிவுட் திரையுலகில் ஒரு சிலர் அனிமல் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இப்படத்தில், பாபி தியோலின் நடிப்பு பாராட்டப்பட்டது. அனிமல் படத்தைத் தொடர்ந்து அவர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபி தியோல், அனிமல் படத்தில் தான் ஏற்று நடித்த அப்ரார் போல கதாபாத்திரத்தில் மீண்டும் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன் என்றார். மேலும், தனக்கு கிடைக்கும் வழக்கமான கதாபாத்திரத்தை தாண்டி புதுமையாக நடிக்கவும் காத்திருக்கிறேன் என்றார்.

MUST READ