Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் தனுஷின் 'இட்லி கடை'.... புதிய ரிலீஸ் தேதி இதுதானா?

தள்ளிப்போகும் தனுஷின் ‘இட்லி கடை’…. புதிய ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

தனுஷ் நடிக்கும் இட்லி கடை படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.தள்ளிப்போகும் தனுஷின் 'இட்லி கடை'.... புதிய ரிலீஸ் தேதி இதுதானா?

நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் இவர் இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படம் நடிகர் தனுஷின் 52வது படமாகும். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு தேனி பொள்ளாச்சி, மதுரை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் தாய்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. தள்ளிப்போகும் தனுஷின் 'இட்லி கடை'.... புதிய ரிலீஸ் தேதி இதுதானா?அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் தாய்லாந்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் காம்பினேஷன் காட்சிகள் எடுக்கப்பட இருப்பதால் நித்யா மேனன் போன்ற மற்ற நடிகர்களின் கால் ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 அன்று திரைக்கு வருவதால் இட்லி கடை படத்திற்கு குறைவான திரையரங்குகளை கிடைக்கும் என்பதாலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என சொல்லப்படுகிறது. எனவே 2025 ஏப்ரல் 24ஆம் தேதி இட்லி கடை படத்தை வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ