ஜெயிலர் 2 படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 நெல்சன், ரஜினி, அனிருத் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் ரஜினிக்காக தரமான கதையை தயார் செய்து சிறந்த கம்பேக் கொடுத்திருந்தார். அதேபோல் ரஜினியும் வழக்கம்போல் மாஸுக்கு மேல் மாஸ் காட்டி மிரள வைத்திருந்தார். அடுத்தது அனிருத் மிரட்டலான பின்னணி இசையில் பட்டைய கிளப்பியிருந்தார். இவ்வாறு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. எனவே அடுத்தபடியாக இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி சில தினங்களுக்கு முன்னர் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி இணையத்தை கலக்கியது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கப் போகிறார் என செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் தேனி மற்றும் சென்னையில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாகவும் அதன் பின்னர் கோவாவில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இயக்குனர் நெல்சன் ஜெயிலர் முதல் பாகத்தில் மேஜிக் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்ததை போல் ஜெயிலர் 2 படத்தின் மூலமும் ரசிகர்களுக்கு தீனி போடுவார் என்று நம்பப்படுகிறது.