தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருகிறார். அதேசமயம் இவர் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் தேடிவந்த நிலையில் படம் இயக்குவதில் ஆர்வம் உடைய இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். அதன்படி லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியானது. அதன்படி ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள புதிய படத்தில் யார் ஹீரோ என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. நடிகர் கவின், துருவ் விக்ரம் என பலரும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனிடமும் ஜேசன் சஞ்சய் கதை கூறியதாகவும் ஆனால் சிவகார்த்திகேயன் ஒரு சில காரணங்களால் அதை மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்க உள்ள புதிய படம் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் தயாராக இருப்பதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக கிரிக்கெட் கதைக்களத்தில் பல படங்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே லால் சலாம், ப்ளூ ஸ்டார் போன்ற படங்கள் கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.