Homeசெய்திகள்சினிமாமொட்டை அடித்து அலகு குத்திய காதல் பட நடிகை

மொட்டை அடித்து அலகு குத்திய காதல் பட நடிகை

-

பிரபல நடிகை காதல் சரண்யா, திருத்தணி முருகன் கோயிலில் மொட்டை அடித்து அலகு குத்திக் கொண்டார்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பிரபல நடிகை சரண்யா. இவர் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும்போதே, நீ வருவாய் என என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் சந்தியாவின் தோழியாக நடித்து அசத்தியிருப்பார். படம் முழுக்க பயணிக்கும் இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பேசப்பட்டது. மேலும்,காதல் பட சரண்யா என்று அழைக்கப்பட்ட அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கின.

ரெட்ட வாலு, மழைக்காலம், ஈர வெயில் உள்பட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கிலும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதில் முக்கியமான ஒன்று பேராண்மை திரைப்படம். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்த படத்தில் இவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பிறகு நடிகை சரண்யாவுக்கு பட வாய்ப்புக்கள் குவிந்தன

இந்நிலையில், நடிகை சரண்யா திருத்தணி முருகன் கோயிலில் மொட்டை அடித்து அலகு குத்தியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நடிகை சரண்யா, கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டவராம்.

MUST READ