எம்.டி. வாசுதேவன் நாயர் பிரபல மலையாள எழுத்தாளர் ஆவார். மலையாள இலக்கியங்களை படைத்து பெயர் பெற்றவர். மேலும் இவர் திரைத்துறையில் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அந்த வகையில் சிறந்த திரைக்கதைக்காக கிட்டத்தட்ட நான்கு தேசிய விருதுகளை வென்ற பெருமையும் பெற்றவர் எம்.டி. வாசுதேவன் நாயர். மேலும் பத்மபூஷன் விருதையும் பெற்றவர். இந்நிலையில் 91 வயதுடைய இவர் இதயம் செயலிழப்பு தொடர்பாக கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி நேற்று இரவு (டிசம்பர் 25) உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் எம்.டி. வாசுதேவன் நாயருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஒரு மாபெரும் எழுத்து கலைஞனை இழந்துவிட்டோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரிய ஆளுமை எம்.டி. வாசுதேவன் நாயர் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார். மலையாள திரையுலகுக்கு நான் அறிமுகமான கன்யாகுமரி படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட நட்புக்கு இப்போது 50 வயது. கடைசியாக சமீபத்தில் வெளியான மனோரதங்கள் வரை அந்த நட்பு தொடர்ந்தது.
ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்.
மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.
மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது.…
— Kamal Haasan (@ikamalhaasan) December 25, 2024
மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்கு கொடையாக கொடுத்ததோடு வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்ந்தவர். பத்திரிக்கை துறையிலும் தன் தடத்தை ஆழமாக பதித்த அவரது மறைவு வேதனையையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது. எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றுள்ளது. இது பேரடைப்பு. தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இதயபூர்வமான அஞ்சலி” என்று குறிப்பிட்டுள்ளார்.