Homeசெய்திகள்சினிமா'கங்குவா' படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்... முதல் விமர்சனம் கொடுத்த பாடலாசிரியர்...

‘கங்குவா’ படம் பார்த்து மெய்சிலிர்த்தேன்… முதல் விமர்சனம் கொடுத்த பாடலாசிரியர்…

-

 தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அவரது தந்தை சிவக்குமார் நடிகராக இருந்தாலும், தனது நடிப்பில் மூலம் மட்டுமே சினிமாவில் உயரத்திற்கு சென்ற பெருமை இவரைச் சேரும். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன.
இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய திரைப்படம் தான் கங்குவா. இப்படத்தை பிரபல கமர்ஷியல் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். சூர்யாவின் திரை வாழ்வில் மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்று கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகிறது. படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கிறார். பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவு பெற்று பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் சுமார் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது
இந்நிலையில், கங்குவா படத்தை முதலாக கண்டு ரசித்த படத்தின் பாடல் ஆசிரியர் விவேகா, படம் பார்த்து மெய்சிலிர்த்தேன். இந்திய சினிமாவின் பெருமை மிகு பிரம்மாண்டம், இயக்குனர் சிவா நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் செல்கிறார்..சூர்யா சாரின் நடிப்பு உச்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ