நடிகர் கார்த்தி தனது 25வது படமான ஜப்பான் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதைத் தொடர்ந்து பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன், நலன்குமார் சாமி இயக்கத்தில் வா வாத்தியார் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் சமீபத்தில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கப் போகும் சர்தார் 2 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. வருகின்ற ஜூலை 15ஆம் தேதி இதன் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் கார்த்தி. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக, அதாவது லோகேஷ், ரஜினியின் கூலி திரைப்படத்தை முடித்த பின்னர் தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் கார்த்தி, விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படம் கார்த்தியின் 30வது படமாக தயாராக இருக்கிறது. இதனை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்க உள்ளது.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் 1960களில் நடப்பது போன்ற கதையாக இந்த படம் உருவாக இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -