கார்த்திக் சுப்பராஜ் தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானவர். தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்ற இவர், அடுத்தடுத்த வித்தியாசமான படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படத்தை இயக்கியுள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற மே 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ், தன்னுடைய ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் சார்பில் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும் வருகிறார். மேலும் இவர் ரஜினி போன்ற பெரிய நடிகர்களிடம் கதை சொல்லி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் ரஜினி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்திருந்தார் கார்த்திக் சுப்பராஜ். இதனை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருந்தது.
இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜ் அந்த சந்திப்பு குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியுள்ளார். அதன்படி அவர், “என் வீட்டின் அருகில் தான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அன்று என்னுடைய பிறந்தநாள் என்பதால் நான் ரஜினி சாரை பார்க்க விரும்பினேன். உடனே அவரை தொடர்பு கொண்டு நான் வரலாமா? என்று கேட்டேன். அதற்கு அவர் மகிழ்ச்சியாக வாருங்கள் என்றார். நான் அங்கு சென்றபோது லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே நெல்சனுடன் இருந்தார். அனைவரையும் சந்தித்தது மறக்க முடியாத நாளாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -