Homeசெய்திகள்சினிமாமைக்கை எடுத்தாலே என் கல்யாணம், வீட்டுக்காரர் பத்தி தான் கேப்பீங்களா - கலாய்த்த கீர்த்தி பாண்டியன்

மைக்கை எடுத்தாலே என் கல்யாணம், வீட்டுக்காரர் பத்தி தான் கேப்பீங்களா – கலாய்த்த கீர்த்தி பாண்டியன்

-

90களில் கோலிவுட்டில் கலக்கிய நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமானவர் கீர்த்தி பாண்டியன். தமிழில் தும்பா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் அவருடன் தர்ஷன் இணைந்து நடித்திருப்பார். இப்படத்தைத் தொர்ந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் அவரும், அவரது தந்தை அருண் பாண்டியனும் சேர்ந்து நடித்திருந்தனர். இதனிடையே, பிரபல நடிகர் அசோக் செல்வனை கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளாக காதலித்து வந்த அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையடுத்து, கீர்த்தி பாண்டியன் கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனுடன் அம்மு அபிரதாமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, ஆகியோரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். நான்கு பெண்கள், நான்கு சூழ்நிலைகள் என கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்க மூன், இ5 நிறுவனங்கள் இணைந்து கண்ணகி படத்தை வெளியிடுகிறது. அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மாறுபட்ட திரைக்கண்ணோட்டத்தில் படம் உருவாகியுள்ளதாக அனைவரும் பாராட்டினர்.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கீர்த்தி பாண்டியன், எப்போது மைக்கை எடுத்தாலும், தன் கல்யாண வாழ்க்கை மற்றும் தன் கணவர் அசோக் செல்வன் பற்றியே கேள்விகள் கேட்பதாக அனைவரையும் கலாய்த்து பேசினார். மேலும், தான் கண்ணகி என்ற படத்தில் நடித்துள்ளேன், இந்த படம் குறித்தும் கேள்வி கேட்கலாம் எனவும் அவர் நகைச்சுவையாக குறிப்பிட்டார். கண்ணகி திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ