Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்து விருதுகளை வென்று குவிக்கும் கொட்டுக்காளி

அடுத்தடுத்து விருதுகளை வென்று குவிக்கும் கொட்டுக்காளி

-

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி பல சிறந்த தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இதுவரை 5 படங்களை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் அடுத்து உருவாகியுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, படங்களின் வரிசையில், ‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
 விடுதலை படத்திற்கு பிறகாக சூரி இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள பிரபலம் அன்னா பென் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வந்தன. இதைத்தொடர்ந்து, 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும், பல சர்வதேச விருதுகளில் பல விருதுகளை இத்திரைப்படம் வென்றுள்ளது.

இந்நிலையில், போர்ச்சுகலில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்திற்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம் என்ற பிரிவில், சூரியின் கொட்டுக்காளி படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், கொட்டுக்காளி திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ