கவின் நடிக்கும் மாஸ்க் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான கவின் ஆரம்பத்தில் சின்னத் திரையில் பணியாற்றி தற்போது வெள்ளித்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் கடைசியாக ப்ளடி பெக்கர் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் கிஸ், ஹாய் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இதற்கிடையில் இவர், பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மாஸ்க் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவின் உடன் இணைந்து ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தை விக்ரணன் அசோக் இயக்குகிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தினை 2025 மே மாதத்தில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.