Homeசெய்திகள்சினிமாலோகேஷ், ரஜினியின் 'கூலி' ..... ஐதராபாத்தில் நாளை தொடங்கும் படப்பிடிப்பு!

லோகேஷ், ரஜினியின் ‘கூலி’ ….. ஐதராபாத்தில் நாளை தொடங்கும் படப்பிடிப்பு!

-

நடிகர் ரஜினி தற்போது தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது 2024 அக்டோபர் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171 வது படத்தில் நடிக்க இருக்கிறார்.லோகேஷ், ரஜினியின் 'கூலி' ..... ஐதராபாத்தில் நாளை தொடங்கும் படப்பிடிப்பு! இந்த படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படம் தொடர்பான அறிவிப்பு டீசரை படக்குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியிட்டிருந்தனர். அதை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது. அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக படப்பிடிப்பிற்கான டெஸ்ட் லுக் நடைபெற்றது. அதன் பின்னர் கூலி படக்குழு ஐதராபாத்திற்கு சென்றுள்ளது. அங்கு படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், கூலி படத்தில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். லோகேஷ், ரஜினியின் 'கூலி' ..... ஐதராபாத்தில் நாளை தொடங்கும் படப்பிடிப்பு!விரைவில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், கூலி படத்தின் படப்பிடிப்பு நாளை (ஜூலை 5 ஆம் தேதி) ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது..

MUST READ