Homeசெய்திகள்சினிமாபுதிய படம் தயாரிக்கும் டொவினோ தாமஸ்... இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்...

புதிய படம் தயாரிக்கும் டொவினோ தாமஸ்… இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்…

-

மோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் மலையாளத்தில் பல படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். தொடர்ந்து மலையாளப் பக்கம் திரும்பிய டொவினோ, மின்னல் முரளி, 2018 என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து டாப் நட்சத்திரமாக உயர்ந்தார். 2018- என்ற படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றதோடு, ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் நடிகர் என்ற திரைப்படம் வெளியானது. தற்போது ஐடன்டிடி என்ற திரைப்படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இந்நிலையில், நடிகராக வலம் வரும் டொவினோ தாமஸ் புதிய திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இதில் மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரும், நடிகருமான பேசில் ஜோசப் நடிக்க இருக்கிறார். இவர் டொவினோவை வைத்து மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர்.
மரணமாஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. அறிமுக இயக்குநர் சிவபிரசாத் இப்படத்தை இயக்குகிறார். ஜே உன்னிதன் படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும், பேசில் ஜோசப், நஸ்ரியாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ