Homeசெய்திகள்சினிமாமஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு... கேரள காவல்துறை விசாரணை...

மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது மோசடி வழக்கு… கேரள காவல்துறை விசாரணை…

-

மலையாளத்தில் பெரும் ஹிட் படமாக மாறியுள்ள மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் மீது கேரள போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

ஓரிரு திரைப்படங்கள் மட்டும் மலையாள மொழியைத் தாண்டி தமிழ் மொழியிலும் மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருக்கின்றன. த்ரிஷயம், ஹிருதயம், சிபிஐ, பிரேமம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக மலையாள மொழியில் வெளியாகும் அனைத்து படங்களுமே மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் படம் ஹிட் அடிக்கின்றன. அதில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் சம்பவங்கள், ஒருவருக்காக நண்பர்கள் இறங்கிச் செல்லும் நிகழ்வுகள், இது தான் இத்திரைப்படத்தின் அடித்தளக்கதை. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள பிரபலங்கள் மட்டுமன்றி தமிழ் நட்சத்திரங்களும் பாராட்டினர். தமிழ் நட்சத்திரங்கள் பலரும் படத்தை கண்டு ரசித்ததோடு, படக்குழுவையும் பாராட்டியும் உள்ளனர். இத்திரைப்படம் சுமார் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டியுள்ளது.

இந்நிலையில், அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் வலியத்தரா என்பவர், மஞ்சுமல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் மீது எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடி முதலீடு செய்தேன். லாபத்தில் 40 சதவிகிதம் தருவதாக கூறி மோசடி செய்துவிட்டனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ