நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தற்போது மண்ணாங்கட்டி, தி டெஸ்ட் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.
இது ஒரு பக்கம் இருக்க நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா ஆகியோரின் கூட்டணியில் எல் ஐ கே எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் சைமா எனப்படும் தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் துபாய் சென்றிருந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் துபாயில் தங்களின் ஓய்வு நேரத்தை செலவழித்து வரும் நிலையில் இன்று (செப்டம்பர் 18) இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது 39 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருக்கு வாழ்த்து தெரிவித்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் விக்னேஷ் சிவனுக்கு நடிக்க நயன்தாரா முத்த மழை பொழிந்துள்ளார். மேலும், “எனது எல்லாமமாக இருப்பவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன் மீது நான் கொண்ட அன்பை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உயிர் மற்றும் உலக் ஆகிய நம் குழந்தைகள் போல் கடவுள் எப்போதும் உன் வாழ்வில் எல்லாமும் கிடைக்க ஆசீர்வதிப்பார்” என்று பதிவு ஒன்றிணையும் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.