பா. ரஞ்சித் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா. ரஞ்சித். அந்த வகையில் இவர் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். இருப்பினும் கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையில் சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தையும் இயக்க திட்டமிட்டுள்ளார் பா. ரஞ்சித். அதே சமயம் இவர் வேட்டுவம் என்ற திரைப்படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தது.
ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்றும் பல தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (மார்ச் 29) காரைக்குடியில் தொடங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -