Homeசெய்திகள்சினிமாஆந்திர மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிம்பு...... நன்றி தெரிவித்த பவன் கல்யாண்!

ஆந்திர மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிம்பு…… நன்றி தெரிவித்த பவன் கல்யாண்!

-

ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழையினால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆந்திர மாநிலத்தின் குண்டூர், மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் போன்ற கடலோர மாவட்டங்கள் பெரும் சேதம் அடைந்தன. ஆந்திர மக்களுக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கிய சிம்பு...... நன்றி தெரிவித்த பவன் கல்யாண்!அங்குள்ள மக்களும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் அவர்களை மீட்டெடுத்து பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைத்தனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திரை பிரபலங்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஜூனியர் என்டிஆர் போன்றோர் நிவாரண நிதி வழங்கி வந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து நடிகர் சிம்பு கிட்டத்தட்ட 3 லட்சம் வரை நிதி உதவி வழங்கியிருந்தார். இது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர் சிம்புவிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு. சிலம்பரசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள். உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ