நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா
திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தனது 43 வது படத்தில் நடிக்க கமிட்டானார். சூர்யா 43 படத்தை சூரரைப் போற்று படத்தை இயக்கியிருந்த சுதா கொங்கரா இயக்கப் போவதாகவும் அந்த படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதே சமயம் இந்த படம் 1950 களில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் புறநானூறு படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, பீட்சா, ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. எதிர்பாராத காம்போவில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா புறநானூறு, சூர்யா 44 ஆகிய இரண்டு படங்களிலுமே ஒரே நேரத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இனி வரும் நாட்களில் படப்பிடிப்பு தொடங்குவது சம்பந்தமான அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.