
பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் நடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு லவ் டுடே எனும் திரைப்படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடித்திருந்தார் பிரதீப் ரங்கநாதன். சத்யராஜ் , ராதிகா சரத்குமார், இவானா ஆகியோரின் கூட்டணியில் வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
அதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி எல்ஐசி என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தையும் பூஜை சமீபத்தில் தொடங்கப்பட்டு படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார்.
இந்நிலையில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 2020 இல் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் பிரபலமான அஷ்வத் மாரிமுத்து இந்த புதிய படத்தை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் எல்ஐசி படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின் பிரதீப் ரங்கநாதன் இதில் நடிப்பார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.