பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த ஆண்டு தேவரா எனும் திரைப்படம் வெளியானது. கொரட்டலா சிவா இயக்கியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் தனது 31வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இந்த படத்தினை நந்தமுரி தரகா இராமராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் இப்படம் 2026 ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து ருக்மினி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இதன் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 19) தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.