நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படத்தை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் பட குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். அந்த போஸ்டர் மூலம் அஜித் மூன்று வேடங்களில் நடிப்பதாக தெரியவந்தது. மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகிறது. இந்த படமானது 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10 அன்று ஐதராபாத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் புதிய வரவாக பிரேமலு பட நடிகர் நஸ்லேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நஸ்லேன் இந்த படத்தில் அஜித்துக்கு மகனாக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -