Homeசெய்திகள்சினிமாபிரியங்கா - மணிமேகலை விவகாரம்.... இதுதான் நடந்தது.... திடீரென ரூட்டை மாற்றும் குரேஷி!

பிரியங்கா – மணிமேகலை விவகாரம்…. இதுதான் நடந்தது…. திடீரென ரூட்டை மாற்றும் குரேஷி!

-

கடந்த சில தினங்களாக சின்னத்திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது பிரியங்கா-மணிமேகலை விவகாரம் தான். பிரியங்கா - மணிமேகலை விவகாரம்.... இதுதான் நடந்தது.... திடீரென ரூட்டை மாற்றும் குரேஷிஅதாவது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை தொகுப்பாளினியாகவும் பிரியங்கா குக்காகவும் பணியாற்றி வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். போட்டியாளராக கலந்து கொண்ட தொகுப்பாளினியின் ஆதிக்கம் தாங்க முடியாமல் தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்திருந்தார். இந்த சம்பவம் நடந்து ஐந்து தினங்களாகியும் இன்று வரையிலும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பிரியங்கா - மணிமேகலை விவகாரம்.... இதுதான் நடந்தது.... திடீரென ரூட்டை மாற்றும் குரேஷிஇந்த விவகாரத்தில் பலரும் தொகுப்பாளினி மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தற்போது குரேஷி உண்மையில் நடந்தது இதுதான் என புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த விவகாரத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார். “திவ்யா துரைசாமி எலிமினேட்டான அந்த நாளில் தான் இந்த பிரச்சனை தொடங்கியது. அப்போது திவ்யாதுரை சாமி ஒவ்வொருவரையும் பற்றி பேசினார். அப்போது பிரியங்கா, திவ்யா துரைசாமி குறித்து பேசலாமா என கேட்க ரக்ஷனும் அதற்கு ஒப்புக்கொண்டார். பிரியங்கா - மணிமேகலை விவகாரம்.... இதுதான் நடந்தது.... திடீரென ரூட்டை மாற்றும் குரேஷிஆனால் மணிமேகலை, நீங்கள் பேச வேண்டாம் பிரியங்கா. ஏற்கனவே நீங்கள்தான் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினி என எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று தடுத்தார். இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிமேகலை, பிரியங்காவை பேசவிடாமல் தடுத்தது, பிரியங்காவின் மனதை புண்படுத்தியது. இதன் காரணமாக அவர் வெளியேறினார். இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்கும்போது, கடந்த வாரத்தில் நடந்த விஷயங்களை எல்லாம் பற்றி பேசிவிட்டு ஷூட்டிங்கை தொடங்கி விடலாம் என்று பிரியங்கா நினைத்துக் கொண்டிருந்தார். அதேபோல் சக போட்டியாளராக தன்னுடைய பேச்சுரிமை தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்த நினைத்து பிரியங்கா பேசினார். பிரியங்கா - மணிமேகலை விவகாரம்.... இதுதான் நடந்தது.... திடீரென ரூட்டை மாற்றும் குரேஷிஆனால் மணிமேகலை அதை ஏற்காமல் பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. என்னால் அப்படி செய்ய முடியாது என்று கோபப்பட்டு கேரவனுக்கு சென்று விட்டார். இரண்டு மணி நேரங்கள் ஷூட்டிங் நடக்கவே இல்லை. அதாவது மணிமேகலையை யாரும் மன்னிப்பு கேட்க சொல்லவே இல்லை. ஆனால் மணிமேகலை சுயமரியாதை என்பதை இந்த விஷயத்தில் நுழைத்து அதை பெரிய அளவில் ஆக்கிவிட்டார். மணிமேகலை, பிரியங்கா இருவருக்கும் பிரச்சனை இருந்தால் அதை தனியாக பேசியிருக்கலாம். தனியாக பேசியிருந்தால் இந்த விஷயத்தை பிரியங்கா வேற மாதிரி கொண்டு வந்திருப்பார்” என்று பேசி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் குரேஷி. இந்த வீடியோவை பார்த்த பலரும் குரேஷி ஏன் இப்படி திடீரென ரூட்டை மாற்றுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ