Homeசெய்திகள்சினிமா50 கோடி வசூலை நெருங்கும் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் ஜிகர்தண்டா டபுள்...

50 கோடி வசூலை நெருங்கும் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

-

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014இல் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா கூட்டணியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு எட்டு வருடங்கள் கழித்து கார்த்திக் சுப்பராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்  திரைப்படம் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி தீபாவளியையொட்டி வெளியானது. 50 கோடி வசூலை நெருங்கும் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!மதுரையில் கேங்ஸ்டராக இருக்கும் ராகவா லாரன்ஸ், கருப்பு நடிகனாக வேண்டும் என்று நினைக்கிறார். அவரை கொல்ல வேண்டும் என போலியான இயக்குனராக எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். இறுதியில் ராகவா லாரன்ஸ் நடிகனாக மாறினாரா? எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் கொல்ல முயற்சிப்பதற்கான காரணம் என்ன? என்பதே
படத்தின் முழு நீள கதையாகும்.50 கோடி வசூலை நெருங்கும் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா கூட்டணியின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்!

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வழக்கம்போல் தன் நடிப்பில் பட்டய கிளப்பி இருக்கிறார். ராகவா லாரன்ஸ் இதுவரை நடித்த படங்களை விட இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான பரிமாணத்தில் நடித்திருக்கிறார். குறிப்பாக இறுதி முப்பது நிமிடங்களில் வரும் ராகவா லாரன்ஸ் -ன் நடிப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. இவ்வாறு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி இப்படம் வசூலிலும் வெற்றி பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் உலக அளவிலான வசூல் கிட்டத்தட்ட 50 கோடியை நெருங்குவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் 100 கோடியை தொட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ