Homeசெய்திகள்சினிமாராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?

ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியின் புதிய படம்….. ஷூட்டிங் எப்போது?

-

பான் இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனராக கொண்டாடப்படுபவர் இயக்குனர் ராஜமௌலி. இவர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது?இந்த படங்கள் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் ஆர் ஆர் ஆர் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். நிலையில் அடுத்ததாக இவர் மகேஷ் பாபுவை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

நடிகர் மகேஷ்பாபு தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் கடைசியாக குண்டூர் காரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கப் போகிறார் என தகவல்கள் கசிந்துள்ளது. மேலும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2024 ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியின் புதிய படம்..... ஷூட்டிங் எப்போது? தற்போது படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் எனவும் ஏற்கனவே வெளியான தகவலின்படி அமேசான் காடுகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ