Homeசெய்திகள்சினிமாநட்பா? காதலா? மீண்டும் மீண்டும் ரசிகர்களை குழப்பும் ராஷ்மிகா...

நட்பா? காதலா? மீண்டும் மீண்டும் ரசிகர்களை குழப்பும் ராஷ்மிகா…

-

தெலுங்கில் உச்ச நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா. நடிகை ராஷ்மிகா அறிமுகமானது கன்னட சினிமாவாக இருந்தாலும், அவர் முன்னணி நடிகையாக வலம் வருவது தெலுங்கு சினிமாவில்தான். தற்போது இந்தியில் அனிமல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் இந்தியிலும் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் தான் ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் அறிமுகமான முதல் படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் அடித்தது. தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டியர் காம்ரேட் திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இதன்பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. ஆனால், இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு செல்வது என அடிக்கடி சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டனர். அண்மையில் இருவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை இருவருமே மறுத்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வௌியிட்டுள்ள ஒரு புகைப்படம் மீண்டும் இது குறித்த விவாதத்தை தொடங்கி உள்ளது. இந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள, பிங்க் நிற குல்லா கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஜய் தேவரகொண்டாவும் அணிந்திருந்தார். இதனால், இருவரின் புகைப்படத்தை வெளியிட்டு, மீண்டும் காதல் சர்ச்சையை தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள். இதனால், இது நட்பா அல்லது காதலா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

MUST READ