Homeசெய்திகள்சினிமாஹீராமண்டி தொடருக்கு வரவேற்பு... இரண்டாம் பாகத்தை இயக்க பன்சாலி முடிவு...

ஹீராமண்டி தொடருக்கு வரவேற்பு… இரண்டாம் பாகத்தை இயக்க பன்சாலி முடிவு…

-

ஹீராமண்டி தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தை இயக்க சஞ்சய் லீலா பன்சாலி தெரிவித்துள்ளார்.

வரலாற்று கதைகளான பீரியட் டிராமாக்களை இயக்கி அதில் வெற்றியும் காணும் திறமை கொண்டவர் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. பிரம்மாண்ட படைப்புகளை இயக்குவதில் இவர் மிகவும் கை தேர்ந்தவர். பணத்தை கொட்டி பெரும் பொருட் செலவில் திரைப்படங்களை இயக்கும் வழக்கம் கொண்டவர் சஞ்சய் லீலா பன்சாலி. இவர் இயக்கிய பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி, ராம் லீலா ஆகிய திரைப்படங்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தன.

இவர் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வௌியான கங்குபாய் காத்யவாடி திரைப்படம் அதிரிபுதிரிட ஹிட் அடித்தது. மேலும், தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இப்படத்தில் நடித்த அலியா பட்டுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய தொடர் தான் ஹீராமண்டி. . இதில் மனிஷா கொய்ராலா, சோனாக்ஷி சின்ஹா, அதிதி ராவ், சர்மின் சேகல், ரிச்சா சதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த தொடர் அண்மையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வௌியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாம் பாகத்தை இயக்க சஞ்சய் லீலா பன்சாலி முடிவு செய்துள்ளார். அதன்படி, லாகூரிலிருந்து வெளியேறும் பெண்கள் திரைப்படத்தில் நடிப்பது போன்று இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

MUST READ