Homeசெய்திகள்சினிமாமகளுக்காக கோடிகளை கொட்டும் ஷாருக்கான்... கிங் படப்பிடிப்பு தீவிரம்...

மகளுக்காக கோடிகளை கொட்டும் ஷாருக்கான்… கிங் படப்பிடிப்பு தீவிரம்…

-

பாலிவுட்டின் கிங்கானாகவும், இந்தி திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வரும் முன்னணி நட்சத்திரம் ஷாருக்கான். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மூன்று திரைப்படங்களும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை புரிந்தன. ஆண்டின் தொடக்கத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் வெளியானது. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி வசூலித்தது.

இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ஜவான் படம் வெளியானது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. தொடர்ந்து ஷாருக்கான், டாப்ஸி ஆகியோர் நடித்த டன்கி திரைப்படம் ஆண்டு இறுதியில் வெளியானது. இந்நிலையில், ஷாருக்கான் அடுத்ததாக கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார் . சுஜோய் கோஷ் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானாகானும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இவர் ஆர்ச்சீஸ் என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அடுத்ததாக தந்தையுடன் இணைந்து நடிக்கிறார். மகளும் தன்படத்தில் நடிப்பதால், கிங் படத்திற்காக சுமார் 200 கோடி ரூபாய் பணத்தை ஷாருக்கான் செலவலித்துள்ளாராம். படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வௌியிட அவர் திட்டமிட்டுள்ளராம்.

MUST READ