நடிகர் அஜித் தற்போது தனது 62 வது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மீகாமன், தடம், தடையறத் தாக்க படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் அஜித் தவிர அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் 70% படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் வணிக ரீதியிலான காரணத்தாலும், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணத்தாலும் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் சமீபத்தில் தொடங்கிய இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் இன்று காலை அஜர்பைஜானிலிருந்து சென்னை திரும்பினார் என்ற செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து மீண்டும் படப்பிடிப்பில் இணைவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் நடிகர் அஜித் திடீரென எதற்காக படப்பிடிப்பிலிருந்து சென்னை திரும்பினார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதாவது நடிகையும் அஜித்தின் மனைவிமான ஷாலினிக்கு ஒரு முக்கியமான ஆபரேஷன் நேற்று ஜூன் 1ஆம் தேதி நடைபெற்றதாம். எனவே அவரைக் காண நடிகர் அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஷாலினியின் ஆபரேஷனுக்கு கூட வராமல் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார் அஜித் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது ஏற்கனவே விடாமுயற்சி படப்பிடிப்பு பல சிக்கல்களைக் கடந்து தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பை விட்டு விட்டு சென்னை திரும்பினால் நன்றாக இருக்காது என்றும் அது தயாரிப்பு நிறுவனத்திற்கும் நஷ்டமாக வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தும் நடிகர் அஜித் இவ்வாறு செய்திருக்கிறாராம். தன்னை பற்றி மட்டும் யோசிக்காமல் மற்றவர்களை பற்றியும் யோசிக்கும் அஜித்தின் இந்த பண்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது இன்று பலரும் அஜித்தின் இத்தகைய செயல் குறித்து பாராட்டி வருகின்றனர்.