நடிகர் சித்தார்த், அதிதி ராவ் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரவி வந்தது. அதன்படி இருவரும் அடிக்கடி வெளியில் சுற்றித்திரிவது மட்டுமல்லாமல் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் அப்போது வெளியிட்டு வந்தனர். இதனால் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்று ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்தனர்.
அதேசமயம் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இருவரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக திருமணம் குறித்த தகவல்கள் வதந்தி என்றும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் சித்தார்த் – அதிதி ராவ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாக இருவருமே தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சித்தார்த், சித்தா படத்திற்கு பிறகு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நடிகை ஆதிதி ராவ், ஏற்கனவே காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.