Homeசெய்திகள்சினிமாசிக்கந்தர் படத்தில் அதிரடி விமான சண்டை காட்சி... முடிவுக்கு வரும் முதல் கட்ட படப்பிடிப்பு...

சிக்கந்தர் படத்தில் அதிரடி விமான சண்டை காட்சி… முடிவுக்கு வரும் முதல் கட்ட படப்பிடிப்பு…

-

பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாகவும், இந்திய சினிமாவின் டாப் நட்சத்திரமாகவும் வலம் வருபவர் சல்மான் கான். பாலிவுட் திரையுலகில் சல்மான் கானுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அன்று முதல் இன்று வரை இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு குறைந்ததே இல்லை. கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து அதில் வெற்றி பெறுவதில் மிகவும் கில்லாடியானவர் நடிகர் சல்மான் கான். இவரது பெரும்பாலான திரைப்படங்கள் கமர்ஷியல் படங்களாகவும், நாட்டுப்பற்றை மையப்படுத்திய படங்களாகவும் தான் உள்ளன.
இறுதியாக அவரது நடிப்பில் டைகர் 3-ம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. மனீஷ் ஷர்மா இயக்கி இத்திரைப்படத்தில் கத்ரீனா நாயகியாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து பிரபல கோலிவுட் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் திரைப்படத்தில் சல்மான் கான் நாயகனாக நடித்து வருகிறார். வர்தா நதியத்வாலா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், கரீனா கபூரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் படத்தில் வில்லனாக ப்ரதேய்க் நடிக்கிறார்.
இந்நிலையில், சிக்கந்தர் திரைப்படத்தில் நடிகர் சல்மான் கானும், ப்ரதேய்க்கும் இடம்பெறும் அதிரடி விமான சண்டை காட்சி உள்ளதாம். இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இத்துடன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

MUST READ