Homeசெய்திகள்சினிமாஇரட்டை தோற்றத்தில் கலக்கும் சிம்பு... எஸ்.டி.ஆர்.48 முதல் தோற்றம்...

இரட்டை தோற்றத்தில் கலக்கும் சிம்பு… எஸ்.டி.ஆர்.48 முதல் தோற்றம்…

-

சிலம்பரசன் நடிக்கும் 48-வது திரைப்படத்தின் முதல் தோற்றம் தற்போது வௌியாகி உள்ளது.

ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமும் கொண்டாடும் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிலம்பரசன். அன்று முதல் இன்று வரை இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தந்தையின் விரல் பிடித்து சினிமாவிக்கு அறிமுகமான சிம்பு, இன்று கோலிவுட்டி முக்கிய முகமாக மாறியிருக்கிறார். காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தில் நடித்து அவர் நாயகனாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே மக்கள் மனதில் முத்திரை பதித்த சிம்பு அடுத்தடுத்து காதல், காமெடி, கமர்ஷியல், ஆக்‌ஷன் என பல பரிமாணங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் ஆளாகினார் சிம்பு. உடல் பருமன், படப்பிடிப்பு தாமதம் என பல சிக்கல்களை கடந்து ஈஸ்வரன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

தற்போது கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படம் சிம்பு நடிக்கும் 48-வது படமாகும். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையிலும், படப்பிடிப்பு தொடர்பான எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், இன்று சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இரட்டை வேடத்தில் சிம்பு நடிப்பது இதில் உறுதியாகி உள்ளது.

MUST READ