Homeசெய்திகள்சினிமாமக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு.... காரணம் இதுதானா?

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு…. காரணம் இதுதானா?

-

நடிகர் சிம்பு கடைசியாக பத்து தல திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற அடுத்ததாக தனது 48வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் சிம்பு. மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு.... காரணம் இதுதானா?அதன்படி சிம்புவின் 48வது திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் சிம்பு மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக தகவல்கள் கசிந்தது. அதன்படி தக் லைஃப் படத்தின் முக்கிய காட்சிகள் ராஜஸ்தானில் படமாக்கப்பட்ட வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே நடிகர் சிம்பு நேற்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது.மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காத சிம்பு.... காரணம் இதுதானா?மேலும் நடிகர் சிம்பு, சூரரைப் போற்றுப் பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ