நடிகர் சிம்பு புதிய படம் ஒன்றில் ரெளடியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. அதேசமயம் நடிகர் சிம்பு, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது திரைப்படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51 வது திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அடுத்தது இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது நடிகர் சிம்பு, இப்படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என தகவல் வெளியானது.
அதன் பின்னர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இப்படத்தில் நடிகர் சிம்பு ரெளடியாக நடிக்கிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் STR 49 படத்தில் அவர் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனவே இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.