நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களின் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 14 வது படமான அயலான் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்படம் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்த நிலையில், கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு பல தடைகளை தாண்டி கோலாகலமாக வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பால சரவணன், இஷா கோபிகர், பானுப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே ஜே ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சயின்ஸ் பிக்சன், பேண்டஸி ஜானரில் வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடி வரும் அயலான் படம் முதல் நாளிலேயே ஐந்து கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களும் பொங்கல் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அயலான் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே அயலான் படத்தை மிக அதிக விலைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த நிறுவனம் சன் நெக்ஸ்ட் என்று தெரியவந்துள்ளது.