Homeசெய்திகள்சினிமாதமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை.... எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!

தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை…. எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!

-

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய்யின் தந்தை தான் எஸ்.ஏ. சந்திரசேகர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார்.தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை.... எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி! அந்த வகையில் இவர் செந்தூரப்பாண்டி, ராஜதுரை, நாளைய தீர்ப்பு உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கும் நிலையில் ட்ராபிக் ராமசாமி போன்ற படங்களில் நடிக்கும் இருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர். இந்நிலையில் இவர் தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என சிறப்பு பூஜை செய்துள்ளதாக பேட்டி அளித்துள்ளார்.

அதாவது நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாக உருவெடுத்துள்ள நிலையில் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு தடை இன்றி சிறப்பாக நடைபெற புளியந்தோப்பு விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் கொரட்டூரில் உள்ள விஜய் கட்டிருக்கும் சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பூஜையின் நடிகரும் த. வெ. க. தலைவருமான விஜய், அவரது தாயார் ஷோபா, அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க சிறப்பு பூஜை.... எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி!சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ் ஏ சந்திரசேகர், “வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். விஜய்க்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் ஒரு பெரிய நிலைமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டுமென இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டுள்ளது” என்று பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் த. வெ. க கட்சியில் உங்களுக்கு என்ன பொறுப்பு? என்று கேள்வி எழுப்பிய போது சிரித்தபடி கைகாட்டி விட்டு அந்த இடத்தை கடந்து சென்றார் எஸ்.ஏ சந்திரசேகர்.

MUST READ