Homeசெய்திகள்சினிமாபாலியல் புகாருக்கு எதிராக நிவின் பாலி வெளியிட்ட அறிக்கை!

பாலியல் புகாருக்கு எதிராக நிவின் பாலி வெளியிட்ட அறிக்கை!

-

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. இவர் பிரேமம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.பாலியல் புகாருக்கு எதிராக நிவின் பாலி வெளியிட்ட அறிக்கை! அதைத்தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்திருந்தாலும் சில படங்கள் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. கடைசியாக மலையாளி ஃபிரம் இந்தியா போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்ததாக தமிழில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் தான் நடிகர் நிவின்பாலி மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக நிவின் பாலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. அதாவது நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், நிவின் பாலி தனக்கு சினிமாவில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் கொடுத்துள்ளார். எனவே இது தொடர்பாக எர்ணாகுளத்தில் இருக்கும் ஊன்னுக்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிவின் பாலி உட்பட கிட்டத்தட்ட 6 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக நடிகர் நிவின்பாலி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “என் மீது அந்தப் பெண் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகார் ஆதாரம் இல்லாதது. என் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன். புகாருக்கு பின்னால் இருப்பவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ