Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் அர்ப்பணிப்பால் திகைத்துப் போன ஸ்டண்ட் மாஸ்டர்...... 'சூர்யா 44' லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யாவின் அர்ப்பணிப்பால் திகைத்துப் போன ஸ்டண்ட் மாஸ்டர்…… ‘சூர்யா 44’ லேட்டஸ்ட் அப்டேட்!

-

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது 2024 அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது. சூர்யாவின் அர்ப்பணிப்பால் திகைத்துப் போன ஸ்டண்ட் மாஸ்டர்...... 'சூர்யா 44' லேட்டஸ்ட் அப்டேட்!இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, தனது 43 வது படத்தில் கமிட்டாக அந்த படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்திலிருந்து சூர்யா விலகியதாக சொல்லப்படுகிறது. மேலும் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் அர்ப்பணிப்பால் திகைத்துப் போன ஸ்டண்ட் மாஸ்டர்...... 'சூர்யா 44' லேட்டஸ்ட் அப்டேட்!இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்தமான் பகுதியில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே வெளியான தகவலின் படி வருகின்ற ஜூலை 23 அன்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் அர்ப்பணிப்பால் திகைத்துப் போன ஸ்டண்ட் மாஸ்டர்...... 'சூர்யா 44' லேட்டஸ்ட் அப்டேட்!இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், அந்தமானில் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் இரண்டு பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் அந்த சண்டை காட்சிகளின் போது சூர்யாவின் அர்ப்பணிப்பால் ஸ்டண்ட் மாஸ்டர் கெச்சா கம்பக்டீ திகைத்துப்போய்விட்டாராம். அடுத்ததாக அந்தமானில் நடைபெறும் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைந்து விடும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ