Homeசெய்திகள்சினிமாநாளை தொடங்கும் கூலி படப்பிடிப்பு... ஐதராபாத் சென்றடைந்தார் ரஜினிகாந்த்...

நாளை தொடங்கும் கூலி படப்பிடிப்பு… ஐதராபாத் சென்றடைந்தார் ரஜினிகாந்த்…

-

நாளை கூலி படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றடைந்தார்.

நெல்சன் இயக்கிய ஜெயிலர் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் வேட்டையன். இத்திரைப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். வேட்டையன் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினிகாந்த் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படம் தான் கூலி. இப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஜூலை 5-ம் தேதி  தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத் சென்றடைந்தார். விமான நிலையம் வந்தடைந்த அவரை, பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வரவேற்றார். நடிகர் ரஜினிகாந்தும், மோகன் பாபுவும் நெருங்கிய நண்பர்கள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ