Homeசெய்திகள்சினிமாஇரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யாவின் பாலிவுட் படம்!

இரண்டு பாகங்களாக உருவாகும் சூர்யாவின் பாலிவுட் படம்!

-

சூர்யா ,சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு இப்படம் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து
வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் மற்றும் இரும்பு கை மாயாவி படங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் சந்தூ மொண்டேட்டி இயக்கவுள்ள புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகிறது.இதற்கிடையில் சூர்யா பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி ‘கர்ணா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படம் மகாபாரத கதையை மையமாக வைத்து பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் கூடுதல் தகவலாக இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் உருவாக இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்புகளை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

MUST READ