Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது..... இயக்குனர் அமீர் வேதனை!

தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது….. இயக்குனர் அமீர் வேதனை!

-

சில வருடங்களுக்கு முன்பு ஒருவனை சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, என்னை தாலிபான்களுடன் தொடர்புடையவன் என்று கிளப்பி விட்டுவிட்டுச் சென்று விட்டார்!

தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது. இந்த நிலையில் சங்கத்தை காப்பாற்றுவதாக பேசுகிறார்கள்!தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது..... இயக்குனர் அமீர் வேதனை!

க்யூப் நிறுவனம் தொடங்கும் போது நம்மிடம் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடிவதில்லை இயக்குனர் அமீர் குற்றச்சாட்டு!

புகழையும், பணத்தையும் எடுத்துச் செல்வது நடிகர்களும் இயக்குனர் தான். ஆனால் படத்தொகுப்பாளருக்கு எதுவும் கிடைப்பதில்லை, வருங்காலங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – நடிகை தேவயானி!

திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், உதயகுமார், நடிகர்கள் இளவரசு, சிங்கம் புலி மற்றும் நடிகைகள் தேவயானி, இனியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வெற்றிமாறன் மேடையில் பேசுகையில்,

என்னைப் போன்று படம் எடுப்பவர்களுக்கு எடிட்டிங் ரூம் என்று ஒன்று இல்லை என்றால் படம் வெளியே வராது.
என்னுடைய முதல் படத்திலிருந்து என்னுடைய எடிட்டர்கள் படத்தை உருவாக்குகிறார்கள்.

இயக்குநர் அமீர் மேடையில் பேசுகையில்,தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது..... இயக்குனர் அமீர் வேதனை!

ஒரு இயக்குனருக்கு படத்தொகுப்பு மட்டுமல்ல, இசை, சண்டை, எல்லாமும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு படம் தேருமா தேறாதா என்று கண்டுபிடிப்பது எடிட்டர் தான்.
ஒரு இயக்குனருக்கு தன்னுடைய காதலியுடன் தனியறையில் இருக்கும் போது கிடைக்கும் சந்தோசம் தான், எடிட்டிங் ரூமில் இருக்கும் போது கிடைக்கும்.

எடிட்டர்கள் படத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும்.

படம் தேருமா தேறாது என்பது முக்கியமல்ல. எடிட்டர்கள் அந்தப் படத்தை தேற்ற வேண்டும், அந்தப் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.

சங்கங்களில் உள்ள பிரச்சனையே முதலில் இந்த நிர்வாகம் சரியில்லை என்று கூறுவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு ஒருவனை சங்க நிர்வாகியாக தேர்ந்தெடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, என்னை தாலிபான்களுடன் தொடர்புடையவன் என்று கிளப்பி விட்டுவிட்டுச் சென்று விட்டார்.

ஒவ்வொரு முறையும் பொதுக்குழு நடக்கும்போது கத்தி மேல் நிற்பது போன்றுதான் இருக்கும். அதை சமாளிக்க ஒரு திறமை வேண்டும். எல்லோராலும் பேசி செய்து விட முடியாது.

தமிழ் சினிமா தற்போது அனாதையாக உள்ளது. இந்த நிலையில் சங்கத்தை காப்பாற்றுவதாக பேசுகிறார்கள்.

வருடத்திற்கு 250 படங்கள் உருவாகிறது. ரசிகர்கள் எவ்வளவு படங்களை பார்ப்பார்கள்.

இரண்டு வருடங்கள் பார்ப்பேன் இந்த நிலை சரியாகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களை பிடித்து படமெடுத்துக் கொண்டு அங்கேயே இருந்து விடுவேன்.

எவ்வளவு செலவு செய்து படங்கள் எடுத்தாலும் இங்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

க்யூப் நிறுவனம் தொடங்கும் போது நம்மிடம் வந்து நிற்பார்கள். ஆனால் இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடிவதில்லை அமீர் குற்றச்சாட்டு.

தனித்தனி முதலாளிகளின் கையில் சினிமா மாட்டியுள்ளது. அதை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.

செல்வமணி மேடையில் பேசுகையில்,

சங்கங்களில் நிர்வாகியாக வருவது ஆபத்தானது போன்ற சூழ்நிலை உள்ளது. சங்கங்கள் அதிகாரம் செலுத்துவதற்கான அமைப்பாக இருந்தது. இப்போது திரைப்படத் துறையில் உள்ள சங்கங்கள் சுய ஒழுக்கத்தோடு இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

முன்பெல்லாம் எடிட்டிங் ரூம் என்பது ஒரு குடும்பம் போன்ற இருந்தது அதில் இயக்குனர் கேமரா மேன் அனைவரும் இருப்பார்கள்.

நடிகை தேவயானி,

ஒரு சிறந்த இயக்குனர் ஒரு சிறந்த படத்தொகுப்பாளராகவும் இருக்க வேண்டும். அல்லது ஒரு சிறந்த படத்தொகுப்பாளர் ஒரு படத்தை காப்பாற்ற வேண்டும்.

ஒரு சிறந்த படத்தொகுப்பாளர் இல்லையென்றால் ஒரு சிறந்த படம் வராது.

எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்று ஒரு மருத்துவருக்கு தெரிவது போல், ரசிகர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை ஒரு படத்தொகுப்பாளர் தான் செய்ய முடியும்.

பாரதிராஜா ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்தொகுப்பாளர் கூட.

புகழையும், பணத்தையும் எடுத்துச் செல்வது நடிகர்களும் இயக்குனர் தான். ஆனால் படத்தொகுப்பாளருக்கு எதுவும் கிடைப்பதில்லை. எந்த நிகழ்ச்சியிலும் படத்தொகுப்பாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. வருங்காலங்களில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தேவையான வேண்டுகோள் விடுத்தார்.

இயக்குனர் ஆர். வி உதயகுமார்,

எடிட்டர் தான் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று தேவயானி சொன்னதற்கு, பதில் அளித்த உதயகுமார் தேவயானி, ஒரு இயக்குனரான தனது கணவரை தேவையானதை விட்டு விட்டதாக கலாய்த்தார்.

எடிட்டர்கள் மட்டும் புத்திசாலியாக இருந்தால் போதுமானது இல்லை. இயக்குனர்களும் புத்திசாலியாக இருந்தால்தான் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

சினிமாவை நேசித்ததற்காக கழிவறையில் கூட படுத்து தூங்குவேன் என்று ஆர்வி.உதயகுமாருக்கு கவுண்ட்டர் கொடுத்தார் சிங்கம்புலி.

நீ அரசியலுக்கு சென்று சென்றிருக்க வேண்டிய ஆள். சினிமாவிற்கு வந்து விட்டீர்கள் அரசியலில் முயற்சிக்கலாம் என்று சிங்கம் புலி இடம் கூறினார் ஹாப்பி உதயகுமார்.

நடிகர் போஸ் வெங்கட்,

திரைப்படத் துறையில் உள்ள சங்கங்களில் நல்லது செய்வதில் தான் நிறைய பிரச்சனை உள்ளது. கெட்டது செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை, அவர்களெல்லாம் நன்றாக இருக்கிறார்கள்.

MUST READ