ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி தமிழில் வெளியான சைரன் திரைப்படம், தற்போது தெலுங்கு மொழியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வனாக அப்படங்கவில் ஜெயம்ரவி அசத்தியிருப்பார். திரைப்பயணம் தொடங்கிய குறுகிய காலத்திலேயே முன்னணி இளம் நாயகனாக உருவெடுத்த ஜெயம்ரவி, அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஜெயரம் ரவி நடிப்பில் வெளியான அகிலன், இறைவன் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றன.
இதையடுத்து, ஜெயம்ரவி நடிப்பில் உருவான திரைப்படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான நாள் முதலே சைரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பட வசூலிலும் முன்னேறி வருகிறது.
தமிழைத் தொடர்ந்து சைரன் திரைப்படத்தை தெலுங்கு மொழியில் வெளியிடுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சைரன் திரைப்படம் தெலுங்கில் கடந்த 23-ம் தேதியே வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில், படம் இதுவரை வெளியாகவில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.