தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் கடைசியாக கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி கிட்டத்தட்ட 288 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. விரைவில் இப்படம் 500 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய், அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளதால் தளபதி 69 திரைப்படம் தான் தனது கடைசி படம் என அறிவித்திருந்தார். ஆகையினால் தளபதி 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. மேலும் இப்படத்தினை ஹெச். வினோத் இயக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து இதனை கே வி என் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தது சத்யன்சூரியன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கிறார் எனவும் பிரதீப் ராகவ் இதன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்தது சமந்தா, சிம்ரன், மோகன்லால், மமிதா பைஜூ ஆகியோர் தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தொடர்ந்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பை 2024 அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை (செப்டம்பர் 14) வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே ரசிகர்கள் பலரும் தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
- Advertisement -